1கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது

1கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!!

 

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் பொள்ளாச்சி to ஆழியார் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெத்தினசாமி மகன் முருகானந்தம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 1கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை அறிவித்து உள்ளனர்.