தடையை மீறி கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை – 4 வியாபாரிகள் கைது..!

கோவை உக்கடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று டவுன்ஹால் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்குள்ள பி. எட் .பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் ஒரு பெட்டிக்கடையில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 148 சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்பாக அதை விற்பனை செய்து வந்த ஒண்டிப்புதூர் எஸ். எஸ். காலனியை சேர்ந்த வியாபாரி பாலசுப்பிரமணி ( வயது 60 )கைது செய்யப்பட்டார். இதே போல சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பீடி, சிகரெட் விற்பனை செய்ததாக மசக்காளிபாளையம் வெள்ளத்துரை ( வயது 42) கைது செய்யப்பட்டார். 12 பாக்கெட் பீடி -சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. உப்பிலிபாளையம் – காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பீடி . சிகரெட் விற்பனை செய்ததாக மணிவாசகம் ( வயது 74 ) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 21 பாக்கெட் பீடி -சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. வரதராஜபுரம் பெட்டிக்கடையில் நடந்த சோதனையில் 23 பாக்கெட் பீடி சிகரெட் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வரதராஜபுரம் பாலாஜி நகரை சேர்ந்த கனகராஜ் (வயது 70) கைது செய்யப்பட்டார்..