பள்ளிக்கூடம் அருகே போதை மாத்திரை விற்பனை – 4 பேர் கைது.!!

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள அரசு பள்ளிக்கூடம் பின்புறம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும் 3 கிராம் உயர்ரக போதை பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர்,மின் நகர் அஸ்தம நாயக்கர் வீதியை சேர்ந்த சுலைமான் ( வயது 35) கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த இப்ராஹிம் (வயது 35) குறிச்சி என் பி.இட்டேரியை சேர்ந்த பைசல் ரகுமான் ( வயது 37) குனியமுத்தூர், வசந்தம் நகரை சேர்ந்த சுலைக்கா (வயது45) என்பது தெரிய வந்தது. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.