போலி மின்சார பொருட்கள் விற்பனை- 4 வியாபாரிகள் கைது..!

கோவை ஆர் .எஸ் . புரம், சுக்ரவார்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின் பொருள் விற்பனை கடையில் போலி மின்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் மணிமாறன் ஆர். எஸ்.. புரம் போலீசில் புகார் . இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அந்த கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலி வயர்கள் பல்புகள், சுவிட்ச்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் ( வயது 30) மணீஷ் குமார் ( வயது 21) ரத்தின லால் ( வயது 40 )ராகுல் (வயது 21 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலி மின் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது..