நீதிமன்றம் அருகே பெட்டிக் கடையில் குட்கா விற்பனை – வியாபாரி கைது..!

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா ஆகியோர் நேற்று கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் 4 -வது கேட்அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா ) மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூரைச் சேர்ந்த எடிசன் ஆன்டோ (வயது 27) கைது செய்யப்பட்டார். சேரன் மாநகர் நாகராஜ் (வயது 42) என்பவரை தேடி வருகிறார்கள். இவரிடமிருந்து இரு சக்கர வாகனம், செல்போன் ,248 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது..