கோவை டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை – சப்ளையர் கைது..!

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா,சப் இன்ஸ்பெக்டர்குரு கணேஷ் ஆகியோர் நேற்று உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18 ) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பக்கம் உள்ள மங்கையநேந்தலை சேர்ந்த சரவணன் ( வயது 41) கைது செய்யப்பட்டார். இவர் அங்குள்ள பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். இவரிடமிருந்து 28 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள சந்தையின் மது விற்றதாக இவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் உள்ளது..