தோட்டத்தில் கள் விற்பனை- கோவை வாலிபர் கைது.!!

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளையனார் குட்டை தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு செவி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கள் விற்றதாக குனியமுத்தூர் நரசிம்மபுரம், சிந்து நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 25) கைது செய்யப்பட்டார். 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.