2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் தொழிலாளி கைது..!

கோவை :திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 29 )இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் தங்கி இருந்த பகுதியில் கோடைவிடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்த 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுமிகளும் பாட்டி மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி பூமிநாதனை.போகசோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.