13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது..!

கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா (வயது 32) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13- வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த மாணவியை ஆசிரியை சவுந்தர்யா வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவிக்கு ஆசிரியை சவுந்தர்யா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் .அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் ஆசிரியை சவுந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் . ஆசிரியை சவுந்தர்யா ஆண்களைப் போன்று முடி வெட்டியும், பேண்ட் சட்டை அணிந்து சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. மாணவிக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..