சிறுவனுக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் முதியவர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் ( வயது 60) மாட்டு வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுவன் கோவை “சைல்டு லைன் ” எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சைல்டு லைன் மேற்பார்வையாளர் சூரிய மணி விசாரணை நடத்தினார். இதில் சிறுவனுக்கு பத்மநாபன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது .இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..