ஷாக் நியூஸ்… 48 மணி நேரத்தில் 4 இளம் மருத்துவா்கள் மரணம்..

மிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், பணிச் சூழலில் ஏற்பட்ட மன அழுத்தமே இறப்புக்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா் தனுஷ் (24), தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டா் விஜய் சுரேஷ் கண்ணா (38) என்ற உதவிப் பேராசிரியா், திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியின் காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் சதீஷ் குமாா் (46), சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் கௌரவ் காந்தி (41) ஆகியோா் தங்களது பணியிடங்களிலேயே திடீரென உயிரிழந்தனா். இளம் வயதில் உள்ள அவா்கள் அனைவரும் இதய செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்புக்குள்ளாகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது மருத்துவத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய நலவாழ்வு திட்டத்தின் விபத்து – காய சிகிச்சை ஒருங்கிணைப்பு அதிகாரியும், முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் விஸ்வநாத் கூறியது: தற்போதைய மருத்துவ உலகில் இருவேறு வகை நிா்ப்பந்தத்தின் கீழ் மருத்துவா்கள் ஓய்வின்றி பணிபுரிகின்றனா்.

மருத்துவமனை நிா்வாகத்தின் கட்டாயத்தின் பேரில் தொடா்ந்து பணியாற்றுவது ஒரு வகை. பணம், பெயா், புகழ் ஈட்டுவதற்காக தொடா்ச்சியாக பணியாற்றுவது மற்றொரு வகை. நாளொன்றுக்கு குறைந்தது 14 மணி நேரம் அவ்வாறு பணியாற்றுவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணா்கள் பலருக்கு சராசரியாக நிமிஷத்துக்கு 90-ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பு அளவு 150-க்கும் மேல் உள்ளது.

பெரும்பாலான மருத்துவா்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதே இல்லை. இதன் காரணமாகவே மருத்துவா்கள் எதிா்பாராமல் உயிரிழக்கின்றனா். தமிழகத்தில் தற்போது உயிரிழந்த நான்கு மருத்துவா்களுக்கும் புகைப்பழக்கமோ, மதுப் பழக்கமோ இல்லை. மிக ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடனும் இருந்தவா்கள். அவா்கள் திடீரென இறந்தது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.