ஷாக்!! 20 ஆண்டுகளுக்கு பின் பூமியை தாக்கிய சூரியப் புயல்..!

20 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை சூரியப் புயல் தாக்கியுள்ளதால் ஜிபிஎஸ், பவர் கிரிட்கள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration NOAA) வளிமண்டலத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை கடுமையான சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியதாக நோவா தெரிவித்து இருக்கிறது. 2003ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 20 ஆண்டுகளுக்குபின் சரியாக நேற்று மாலை 6.54 மணி அளவில் பூமியை சூரிய புயல் தாக்கியதாக நோவா தெரிவித்துள்ளது.

சூரிய புயலின் இந்த தாக்கம் காரணமாக ஜிபிஎஸ், ரேடியோ அலைவரிசை, தகவல் தொடர்பு, மின் அமைப்பு , பவர் கிரிட்கள், செயற்கை கோள் செயல்பாடுகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பாதிக்கப்படலாம் என்றும் நோவா தெரிவித்துள்ளது. முன்னதாக, அக்டோபர் 2003 இல் கடைசி தீவிர (G5) நிகழ்வு ஏற்பட்டது. அந்த நிகழ்வின் விளைவாக ஸ்வீடனில் மின்சாரம் தடைப்பட்டது மற்றும் தென்னாப்பிரிக்காவில் மின்மாற்றிகள் சேதமடைந்தன.’ அமெரிக்காவின் தெற்கே அலபாமா மற்றும் வடக்கு கலிபோர்னியா வரை சூரிய புயல் தாக்கும் என்று நோவா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

கூறியது, சூரிய வளிமண்டலத்தில் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை மிக அதிக வேகத்திற்கு துரிதப்படுத்துகிறது. ‘மிக முக்கியமான துகள்கள் புரோட்டான்கள் ஆகும், அவை ஒளியின் வேகத்தின் பெரிய பகுதிகளுக்கு முடுக்கிவிடப்படுகின்றன. இந்த வேகத்தில், புரோட்டான்கள் சூரியனிலிருந்து பூமிக்கு 150 மில்லியன் கிமீ தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவாகக் கடக்க முடியும், புயல் முடிந்தாலும் கூட, ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.