சுக்ரவார் பேட்டை பால தண்டாயுதபாணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.8 லட்சம் வசூல்..!

கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.இந்த கோவிலில் மொத்தம் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. 3மாதத்திற்கு ஒரு முறை இந்த உண்டியல் பணம் எண்ணப்படுகிறது.இன்று காலையில்அறநிலையத்துறை அதிகாரி ராம்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம்,நிர்வாகிகள் மகேஸ்வரன் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இந்தப் பணியை பகுதி கழகச் செயலாளர் கார்த்திக் செல்வராஜ் பார்வையிட்டார்.விஸ்வேஸ்வர பள்ளிக்கூட மாணவர்கள் 20 பேரும் 30 பெண்களும் இந்த பணியில் ஈடுபட்டனர் மதியம் ஒரு மணிக்கு எண்ணும் பணி முடிவடைந்தது. இதன்படி உண்டியல் மூலம் ரூ 8 லட்சம் பணமும்,,37 கிராம் தங்கமும்,366 கிராம் வெள்ளியும்கோவிலுக்கு வருமானமாக வந்துள்ளது.கடந்த மாதங்களைக் காட்டிலும் இந்த மாதம் உண்டியல் பணம் வருவாய் அதிகரித்துள்ளதாககோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம் தெரிவித்தார்.