ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்..!

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போதை மாத்திரைகள் ஊசிகள் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் நடமாட்டம் தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் இருக்கக் கூடாது என்ற அமலாக்க பிரிவு கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜின் கடுமையான உத்தரவின் பேரில்

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் .அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான 4 கஞ்சா கடத்தல்காரர்களை பிடித்து சுமார் ரூ.20 லட்சம்- மதிப்புள்ள 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மினி லோட் கேரியரான Force Trax பதிவு எண் AP 39 UH 5461 மற்றும் பதிவு எண் AP 21 UH 5461 கொண்ட கார் (Honda Amaze ஆகியவற்றை குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றினர்.

ஆந்திராவை சேர்ந்த சகோதரர்கள் ராஜு என்கிற மோகன்ராஜ், சண்முகநாதன் என்கிற பிரபு, பாலமுருகன் ஆகியோர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்தனர். கஞ்சா ஏற்றிச் சென்ற சுமை வாகனத்திற்கு எஸ்கார்ட் சென்ற ஹோண்டா அமேஸ் காரை செந்தில்நாதன் என்பவர் ஓட்டினார். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தகவலறிந்து வந்த சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸார் திருவள்ளூர் எளாவூர் சோதனைச் சாவடி அருகே வாழைப்பழம் ஏற்றிச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் 100 கிலோ எடையுள்ள 10 கஞ்சா பார்சல்கள் கண்டறியப்பட்டது. வாகனத்தில் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டறிந்த குழுவினர் மேலும் 100 கிலோ எடையுள்ள 10 பார்சல்களையும் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையை சென்னையின் மத்திய நுண்ணறிவு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் .வி.ஷ்யாமளா தேவி மற்றும் . என். எம். மயில்வாகனன்காவல்துறை தலைவர், அமலாக்கம் சென்னை ஆகியோர் மேற்பார்வையிட்டனர். மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டினை காவல்துறை இயக்குநர் .ஷங்கர் ஜிவால். மற்றும் கடுதல் காவல்துறை இயக்குநர் EBCID அமலாக்கப் பணியகம் டாக்டர். அமல்ராஜ், ஆகியோர் பாராட்டினர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 அல்லது CUG எண். 9498410581 என்ற இலவச எண்ணுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடுமையான ரகசியத்தன்மை பராமரிக்கப்படும்..