பைக்கில் கஞ்சா சாக்லேட் கடத்தல் – தந்தை, மகன் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் நேற்று ஆனைமலை – அம்பராம்பாளையம் ரோட்டில் தாத்தூர் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 8 கிலோ 400கிராம் கஞ்சாவும்,100 கிராம் எடை கொண்ட கஞ்சா சாக்லேட்களும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கஞ்சி கோடு, சக்தி நகரை சேர்ந்த முகம்மத் சகாபுதீன் ( வயது 52)அவரது மகன் ஆரிப் ராஜா ( வயது 20 )என்பது தெரிய வந்தது தந்தை. மகன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.