செங்குன்றம் எம்.என் நகர் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்தல் – 3 பேர் கைது..!

செங்குன்றம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு செங்குன்றம் அடுத்த எம் என் நகர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் வேகத்தில் ஹ சர் வேன் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அதை போலீசார் பேரிகார்ட் போட்டு தடுத்து நிறுத்தினர். அதில் 32 கிலோ கஞ்சா என்னும் போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரும்போது போலீஸிடம் பிடிபட்டது. இந்த கஞ்சாவை கடத்தி வந்த ரவுடிகள் 1.மணிகண்டன் என்கிற ஆறு மணிகண்டன் வயது 26 தகப்பனார் பெயர் ராஜா பாடியநல்லூர் செங்குன்றம் 2. கார்த்திகேயன் வயது 23 தகப்பனார் பெயர் கலையரசன் பாடியநல்லூர் செங்குன்றம் 3.விக்னேஸ்வரன் வயது 24 தகப்பனார் பெயர் கலைமாறன் தேனாம்பேட்டை சென்னை ஆகிய மூன்று பேரும் கஞ்சா கடத்துவதில் பயங்கர எக்ஸ்பர்ட்டாம் இவர்கள் மூன்று பேரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..