கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன் ( வயது 45) கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இவரை கைது செய்தனர். இவர் மீது ரேஷன் அரிசி கடத்திய தொடர்பாக 5க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்தார் . இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் இருக்கும் காஜா மொய்தீனிடம் அதற்க்கான நகல் உத்தரவு நேற்று வழங்கப்பட்டது..
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் – குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது..!
