காதலைக் கண்டித்ததால் கோவை சப் இன்ஸ்பெக்டர் மகன் திடீர் மாயம்..!

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நியூ போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் முருகேசன்.இவர் மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணி புரிந்து வருகிறார்.இவரது மகன் யுகன் ( வயது 20) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி..ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதை அவரது தந்தை முருகேசன் கண்டித்தார். இதனால் கடந்த 15 ஆம் தேதி மருதமலைக்கு போவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு செய்து தேடி வருகிறார்கள்..