ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்..!

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் தலைமையில் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது. இக் குறை தீர்ப்பு முகாமில் காவல்துறை கூடுதல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து72 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவுகள் பிறப்பித்தார்கள். இக் குறை தீர்ப்பு முகாமில் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் குறிப்பாக பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.இக் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்ந்து நடத்தப்படும். பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக துரித விசாரணை மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.