கோவை மங்கள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

கோவை ஆர் .எஸ் .புரம்,ராபர்ட்சன் ரோடு, வி .எம் . சி காலனியில் அருள்மிகு. ஸ்ரீ வலம்புரி மங்கள விநாயகர் திருக்கோவில் உள்ளது. இங்கு விநாயக சதுர்த்தியை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சோமு என்ற சந்தோஷ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன், விஜயா, தொழிலதிபர் ராஜு என்ற கருணாமூர்த்தி, பத்மா, வேல்முருகன், விஜித்ரா, ஓய்வு பெற்ற போக்குவரத்து இணை கமிஷனர் சிவசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற வணிகவரி துறை அதிகாரி நடராஜ் – சியாமளா, தர்மராஜ் , ரமேஷ், செந்தில், செல்வகுமார், மணி, மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. கோவில் முகப்பு தோற்றம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் ராஜு என்ற கருணா மூர்த்தி செய்திருந்தார்..