ஆலாந்துறை மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்-வனத்துறையினர் விசாரணை..

கோவை ஆலாந்துறையை அடுத்த நல்லூர்வயல் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சிறுவாணி வழியாக உள்ள சாலையில்  3 மான்கள் வந்தன. இந்த நிலையில் அங்குள்ள ஆரவல்லி குளத்தின் அருகே புள்ளி மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், இறந்து கிடந்த புள்ளிமானை பரிசோதனை செய்தனர். இதில், புள்ளிமானின் தாடையில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, உடல் கூறு ஆய்வு செய்வதற்காக இறந்த மானின் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். மேலும், புள்ளிமான் மின்வேலியில் சிக்கி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் விலங்கு கடித்து இறந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் நல்லூர்வயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.