ஆனாலும், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை சோதனை வாயிலாக, அ.தி.மு.க.,வை போல தி.மு.க.,வையும், தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, பா.ஜ., நினைக்கிறது; அது ஒருபோதும் நடக்காது.முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றோம். இப்போது, தி.மு.க., ஆளும்கட்சியாக இருக்கிறது.
எனவே, ஒரு சதவீதம் ஓட்டு கூட குறையக்கூடாது. அதனால், கட்சியினர் ஒவ்வொருவரும் தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும். வரும் மூன்று மாதங்களுக்கு, வேறு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, தொண்டர்கள் முழு நேரமும் கட்சிக்காக பணியாற்ற வேண்டும். லோக்சபா தேர்தல் வெற்றி தான், 2026 சட்டசபை தேர்தலுக்கான அடித்தளம். இதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்..