ராமநாதபுரத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிக்குமார் (ஓய்வு) உள்ளாட்சி தேர்தல் பணிகள், தேர்தல் செலவினங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை காலத்திற்குள் முடித்திடவும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூலம் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை பணியாளர்களுக்கு பூர்த்தி செய்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிக்குமார் (ஓய்வு) அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சந்தோஷம், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..