ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை,பணம் திருட்டு..!

கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சிக்கராயபுரம், அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி கோமதி ( வயது 40 )இவர் நேற்று வடவள்ளி பஸ் நிலையத்திற்கு தனது ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அங்கிருந்து வடவள்ளி – ஒண்டிப்புதூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். முல்லை நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது பையில் இருந்த 2 பவுன் தங்க நகைகள்,பணம் ரூ 2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து கோமதி வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.