ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு..!

கோவை ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன்பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67) இவர் நேற்று அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி சுந்தராபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மகள் வீட்டுக்கு வந்ததும் ஒரு பைக்குள் வைத்திருந்த அவரது மனிபர்சை காணவில்லை . அதில் 5 பவுன் தங்கச் செயினும், பணம் ரூ 3 ஆயிரமும் இருந்தது.. ஓடும் பஸ்சில் யாரோ திருடி விட்டனர் . இது குறித்து தனலட்சுமி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..