கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் மரணம்..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, வாகா பண்ணையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரங்கன் என்ற பாண்டி (வயது 30)இவர் கோத்தகிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த 18-ஆம் தேதி தேதி சிறையில் இவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ,அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.