கோவை உக்கடம் கேஸ் பங்கில் காரில் திடீர் தீ ….கார் முழுவதும் எரிந்து நாசம்..!

கோவை உக்கடம் -பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஒரு கேஸ் பங்கில் கேஸ் நிரப்புவதற்கு இன்று மதியம் ஆம்னி கார் ஒன்று வந்தது. கேஸ் நிரம்பி கசிவு ஏற்பட்டதால் திடீரென்று அந்த காரில் தீ பிடித்தது. இதை அறிந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் .இதனால் அவர் உயிர் தப்பினார்.இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் ..