சூலூர் புனித சகாய மாதா ஆலய பங்கு தேர்த் திருவிழா..!

சூலூர் பகுதியில் சகாய அன்னை ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் ஆண்டுதோறும் சக எண்ணெய் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் வகையில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது .இதில் கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு எல் தாமஸ் அக்வினாஸ் திருவிழா திருப்பலியினை சிறப்பித்து பங்கின் 46 குழந்தைகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் அருட் சாதனங்களை வழங்கி இறையாசீரை பெற்று தந்தார். மாலையில் திருப்பலியும் தேர்பவனி மறை மாவட்ட முதன்மை குரு பேரருள் ஜான் ஜோசப் ஸ்டேனிஸ் அடிகளார் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருப்பலியின் பிறகு சிறப்பான ஆடம்பர அலங்கார தேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு அன்னா சிரணி கலையரங்கம் வரை சென்று வானவேடிக்கையுடன் ஊர்வலமாக ஆலயம் வந்து சேர்ந்தது.
அதன் பிறகு சுல்தான்பேட்டை மறை மாவட்ட முதன்மை குரு நற்கருணை ஆராதனையை வழிநடத்தி இறையாசீரை பெற்றுத் தந்தார். இறைமக்கள் பெருந்திரளாக நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.