காஞ்சிபுரத்தில் பயங்கர ரவுடிகள் 2 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் இணைந்து போட்ட குண்டர் தடுப்பு சட்டம்.!!

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஆனந்த விநாயகர் கோவில் தெருவில் திருக் காளிமேடு பகுதியில் ராதாகிருஷ்ணனின் மகன் சரவணன் என்கிற பாஸ்ட் ஃபுட் சரவணன் வயது 43 இவன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு கள் என ஏராளமாக நிலுவையில் உள்ளன பயங்கர ரவுடி என பெயர் பெற்ற இவன் பலமுறை எச்சரித்தும் திருந்தாததால் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் இணைந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர் இதே போல் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் திருக் காளிமேடு அன்னை சத்யா நகர் பகுதியில் வசிப்பவன் வேதகிரி இவனுடைய மகன் பயங்கர ரவுடி மணி என்கிற கற்பக மணி வயது 43 இவன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் என ஏராளமாக நிலுவையில் உள்ளது இவன் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டனர் இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூ ப்பிரண்டு சண்முகம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தையே அமைதியான மாவட்டமாக மாற்றிட 24 மணி நேரமும் பாடுபடுவோம் என கூறியுள்ளனர்