காவல் நிலையம் – சோதனை சாவடியில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் திடீர் ஆய்வு..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கார்த்திகேயன். இவர் பதவி ஏற்ற பிறகு மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள், சோதனை சாவடிகள் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள்,செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.நேற்று கோவை -கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் அமைந்துள்ள தமிழக சோதனை சாவடியில் திடீர் ஆய்வு செய்தார். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக்கு கேமராக்கள் முழுமையாக செயல்படுகிறதா? என்றும் சாலை தடுப்புகளையும் பார்வையிட்டார். சோதனை சாவடியில் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாகன சோதனைகள் எவ்வாறு நடத்த வேண்டும்? என்றும் பணியில் விழிப்புடன் செயல்படுவது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார். பின்னர் மதுக்கரை காவல் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் கொடுக்கும் புகாரின் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்..