சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி மானேஜர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 53) எம்.பி.ஏ. பட்டதாரி. கோவையில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து 18 – 3 – 2023-ல் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளியப்பன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தரையை சுத்தம் செய்யக்கூடிய அமிலத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி கிருஷ்ணவேணி வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..