ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் 2ம் இடம் பிடித்து தமிழக காவல்துறை அபாரம்.!!

சென்னை : 73 வது இந்திய காவல்துறை மல்யுத்தம் குழு போட்டிகள் 2024 ஆனது 9.9.2024 முதல் 13.9.2024 வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோ நகரத்தில் துணை ராணுவ படையான sash astra seema bal (ssb) ஆல் நடத்த பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை மல்யுத்த குழு (மல்யுத்தம் குத்துச்சண்டை கைமல் யுத்தம் உடற்கட்டமைப்பு ) அணியை சார்ந்த 80 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 3 தங்கம் 4 வெள்ளி 4 வெண்கலம் ஆக மொத்தம் 11 பதக்கங்கள் மற்றும் arm wres tling பெண்கள் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் 2ம் இடம் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேற்கண்ட வீரர்களை காவல்துறை தலைமை இயக்குனர் / தலைமை படைத்தலைவர் சங்கர் ஜிவால் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.மேலும் காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆயுதப்படை சென்னை மற்றும் கூடுதல் காவல் துறை இயக்குனர் கடலோர காவல் குழுமம் சென்னை ஆகியோர் உடன் இருந்து மேற்கண்ட வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்..