திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸின் ஆலோசனை கூட்டம்..!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அரங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது
தமாகவில் உறுப்பினர் சேர்க்கை விரைவாக நடந்து கொண்டிருக்கிறது 2026 தேர்தலில்
த மா கவின் குரல் சட்டமன்றத்தில் நிச்சயமாக ஒலிக்கும் என்ற ஒரு நோக்கத்தோடு அனைத்து நிர்வாகிகளும் செயல்பட்டு வருகிறார்கள் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டார்கள் மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வரலாமா இல்லையா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவது சாத்தியமே அது தமிழ்நாடு அரசு கையில் தான் உள்ளது தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் இந்த மதுவினால் நிற்கதியாக நிற்கின்றன தமிழக முதல்வர் உடனடியாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தமகாவின் கோரிக்கை இலங்கையில் நமது தமிழர்கள் மீன் பிடிக்க சென்றபோது இளைஞர் ராணுவத்தினர் மீனவர்களை பிடித்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் மீன் பிடிக்கும் படகுகளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள் எத்தனையோ பேர் சிறைவாசத்தில் இருக்கிறார்கள் அவர்களை விரைவாக மீட்க மத்திய மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்றார்