கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல் – கலெக்டர் உத்தரவு..!

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள், பொழுதுபோக்கு மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் தமிழ்நாடு ஓட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல் நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து மதுகூடங்களும் குடியரசு தினமான நாளை ( ஞாயிற்றுக்கிழமை) மூட உத்தரவிடப்படுகிறது. இந்த விதிமுறைகளுக்கும் மாறாக அன்றைய தினம் மதுபானங்கள்விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.