9 வயது மகளுடன் ஆசிரியை திடீர் மாயம்..!

கோவை சரவணம்பட்டி அம்மன் கோவில், அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சபரி கிருஷ்ணன். சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நாக வித்யா (வயது 28) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஒரு வாலிபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாக வித்யா தனது 9 வயது மகள் ஸ்ரீ ரக்சாவுடன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து எங்கோ மாயமாகி விட்டார் . இது குறித்து அவரது கணவர் சபரி கிருஷ்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..