கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம், மைல்கல் ராஜேஸ்வரி கோவில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 38) கட்டுமான தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். மன அழுத்தத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூருக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன் பைக்கை நிறுத்தினார்.அதிலிருந்த பெட்ரோல் எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஹரிப்பிரியா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை தனியார் மருத்துவமனை முன் வாலிபர் தீக்குளித்து தற்கொலை..
