நகை பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – தொழிலாளி காயம்..

கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தில் தனியார் நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த எடிசன் (வயது 25) என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று வெல்டிங் செய்யும் போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது . தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் தொழிற்சாலை கொழுந்து விட்டு எரிந்தது. ஏராளமான பொருட்கள் சேதமடைந்தது . தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த எடிசன் சிகிச்சைக்காக அங்கு உள்ள  தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.