சூலூர் கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து – 15 கார்கள் எரிந்து நாசம்.!!

கோவை சூலூர்அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கார் ஷோரூம் மற்றும் பழைய கார்கள் பழுதுபார்க்கும் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 15 கார்கள் எறிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் சூலூர் தீயணைப்பு படையினர் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி அழகர்சாமி மேற்பார்வையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.. இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..