கோவையில் பயங்கரம்… பெற்ற மகளை அடித்தே கொலை செய்த கொடூர தாய் கைது.!!

கோவை தெலுங்கு பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( வயது 39 )தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் அனுஸ்ரீ (வயது 10 ) 5-ம் வகுப்பு படித்து வந்தார்.. சிறுமி கடந்த 4 மாதங்களாக சிறுநீர் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக மருதமலையில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி சிறுமி தூக்கத்தில் கட்டில் இருந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்ததாக கூறி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாயார் சாந்தலட்சுமி சேர்த்தார் . அங்கு சிறுமி பரிசோதித்த டாக்டர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வபுரம் போலீசுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையில் சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சிறுமியின் தாய் சாந்தலட்சுமியிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன . அதன் விவரம் வருமாறு:- சிறுமி அனுஸ்ரீயிடம் அவரது தாய் மிகவும் கண்டிப்புடன் நடந்துள்ளார் .சிறுமியை அடிக்கடி கரண்டியால் அடித்துள்ளார் .இதில் காயம் ஏற்பட்டு உடல் சதை மிகவும் பாதிக்கப்பட்டு உடலில் இருந்து. ரத்தம் வெளியேறி சிறுநீரகத்தை பாதித்து சிறுமி இ றந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் சாந்தலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர் .அவர் மீது மரணம் ஏற்படும் என்று தெரியாமல் குற்றத்தை விளைவித்தல் , என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவையில் பெற்ற மகளை தாய் அடித்து கொடுமைப்படுத்தியதால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.