சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பயங்கர ரவுடி கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு மாங்காடு ஜங்ஷனில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம ஆசாமி வேகமாக வந்து கொண்டிருந்தான். அவனை மடக்கி பிடித்த போலீசார் யார் என மிரட்டல் பானியில் கேட்கவே திமிரோடு பேசிய மர்ம ஆ சாமி பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்துக் காண்பித்து மிரட்டுவே அதிரடி போலீசார் அவனை நைலான் கையில் கட்டி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸ் பானியில் தடாலடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவனது பெயர் விபரம் வருமாறு சுரேஷ் வயது 34. தகப்பனார் பெயர் அன்பு. மந்தவெளி அம்மன் கோயில் தெரு எச்சூர் கிராமம். ஸ்ரீ பெருமந்தூர் தாலுக்கா காஞ்சிபுரம் மாவட்டம் பிடிபட்ட குற்றவாளி மீது ஒரு கொலை வழக்கு 2 கஞ்சா வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இப்போது 1 கிலோ 50 கிராம் கஞ்சா க டத்தி வரும் போது போலீசாரிடம் பிடிபட்டான். மேலும் அவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்ஷூரன்ஸ் புத்தகம் ஆர் சி புத்தகம் இல்லை.வண்டிக்கு பதிவெண் இல்லை இந்த வண்டி திருட்டு வண்டியாக இருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். குற்றவாளி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..