கோவையில் பயங்கரம்… தண்ணீர் தொட்டிக்குள் வீசி மகள் படுகொலை: 3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை – குடிகார கணவன் கைது..!

கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ்.பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி புஷ்பா (வயது 35) இவர்களுக்கு ஹரிணி (வயது 9) சிவானி (வயது 3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .இன்று காலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள 10 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் 3 பேரும் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . உதவி கமிஷனர் பார்த்திபன்,இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில்தங்கராஜ் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்தாராம்.பிறகு மூத்த மகள் ஹரினியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி கொலை செய்துவிட்டு ஓடிவிட்டார். இதனால் மனம் உடைந்த மனைவி புஷ்பா தனது 3 வயது குழந்தை சிபானியுடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் தங்கராஜை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு , தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.