கோவை ஓட்டல் பார் ஊழியர் மயங்கி விழுந்து சாவு…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48 )இவர் ரயில் நிலையம் அருகே கீதா ஹால் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் பாரில் கடந்த 24 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார் .இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது இடது கால் விரல் அகற்றப்பட்டது .இந்த நிலையில் மேலும் ஓட்டல் பாரில் தொடர்ந்து வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம்வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்..அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார்..இது குறித்து ஓட்டல் உரிமையாளர் தங்கராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.