முகமூடி அணிந்துவீட்டுக்குள் புகுந்து இளம்பெண் மானபங்கம். வாலிபர் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர்27 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவில்அவரது வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது ஒரு ஆசாமி முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டினுள் புகுந்து அந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்தாராம். உடனே அவர் சத்தம் போட்டார்.பின்னர் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து அந்தப் பெண் ஆனை மலை போலிசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து சிங்காநல்லூர், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த ராமசாமி மகன் கார்த்தி (வயது 25) என்பவரை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், மான பங்கம் உட்பட 5 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.