மருத்துவமனையில் மயங்கிய பெண்ணிடம் தாலி செயின் திருட்டு – பெண் ஊழியர் கைது..!

கோவை ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் மேற்கு வீதியை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரது மனைவி முத்துப்பாண்டியம்மாள் (வயது 26 ) இவர் இளங்கோ நகரில் உள்ள பல் கிளீனிக்கில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 1-ந்தேதி இவர் வேலைக்கு சென்ற போது அங்கு வைத்து இவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.இதனால் அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் ரம்யா என்ற பெண் உதவியுடன் அங்குள்ள மேஜையில் படுத்திருந்தார் . சிறிது நேரம் கழித்து பார்த்த போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை காணவில்லை .இது குறித்து முத்து பாண்டியம்மாள் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் வழக்கு பதிவு செய்து அதே பார்மசியில் வேலை பார்த்து வந்த பீளமேடு வி .கே .ரோடு ராஜிவ் லேஅவுட்டை சேர்ந்த கார்த்தி மனைவி ரம்யா (வயது 27) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது.