17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த தாயின் 2-வது கணவர் கைது..!

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவர் தாயார் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தாய் இல்லாத நேரம் அவர் 17வது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து தனது தாயாரிடம் அவர் புகார் செய்தார் .இது தொடர்பாக துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் அம்பேத்கர் நகர் ,பெரியார் நகரை சேர்ந்த நியாசுதீன் (வயது 41) என்பது தெரியவந்தது.இவர் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..