கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் நேர்ந்த விபரீதம்… கொலை முயற்சியில் சீரியஸ்..!

தாம்பரம் பகுதியில் உள்ளது தாழம்பூர் முல்லை நகர் எம் கே ஸ்டாலின் தெருவில் பாலாஜி வயது 64 .இவருடைய மனைவி வெண்ணிலா வயது 47 இவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கணவன் குடித்துவிட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இரவு நேரத்தில் போதையில் வந்துள்ள பாலாஜி மனைவி வெண்ணிலாவிடம் கத்தியை எடுத்து காண்பித்து இன்றைக்கு யாருடன் படுத்துவிட்டு வந்தாய் என சண்டை போட்டுக் கொண்டு வெட்ட வந்துள்ளார். மனைவி வெண்ணிலாவோ என்னை வெட்ட வருகிறாயா இந்த வாங்கிக் கொள் என ஆத்திரத்தில் கத்தியை அவனிடத்தில் இருந்து பிடிங்கி கணவனை சரமாரியாக வெட்டினார் . டேய் நான் மீன் காரியாக இருந்தாலும் மீனை வெட்டுவது போல் எப்படி உன்னை வெட்டி விட்டேன் பார் ஆக்ரோஷமாக கத்தினார். பாலாஜிக்கு அதிக ரத்த வெள்ளம் ஊற்றவே ஆபத்தான நிலையில் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த பின்னர் மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . இந்த சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி வெண்ணிலாவை கொலை முயற்சியின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் . நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர்..