சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம்… நடந்தது என்ன..? சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை.!!

திருநெல்வேலி நகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ் நகரில் கடந்த 21.9.2024 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஸ மாஜம் வரும் வழியில் 14 வது தெற்கு தெரு முக்கில் சர்ச்சுக்கு மிக அருகாமையில் வரும்போது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் பைக்கில் வந்து தன்மகன் அகிலேஷ் அணிந்திருந்த பூணூலை அறுத்துவிட்டு இது போன்ற பூநூலை அணிந்து வரக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றதாக அகிலேஷின் தந்தை சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகார் தொடர்பாக காவல்துறையினரால் 21.9.2024 ஆம் தேதியில் அகிலேஷ் என்பவர் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் மற்றும் சம்பவம் நடந்த சாலையிலும் உள்ள ஐந்து இடங்களில் சி சி டிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் சம்பவ இடத்தில் உள்ள ஆறு சாட்சிகளிலும் விசாரணை செய்ய ப் பட்டது. மேற்படி பதிவுகளில் சம்பவம் நடந்த கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து பூணூலை அறு த்தாக பதிவுகள் இல்லை. அகிலேஷ் என்பவர் சம்பவம் இடம் தாண்டி பொறுமையாக நடந்து வந்து தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி பின் திரும்பி செல்வதாக பதிவாகியுள்ளது. மேற்படி சி சி டிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டதிலிருந்தும் சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததில் இருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை. எனினும் காவல்துறையினர் மேற்படி சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.