பண்ணையில் வளர்த்த மாடு முட்டி பெண் பரிதாப பலி..

கோவை : ஈரோடு மாவட்டம் ,கோபியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி ( வயது 45 ) இவர்கள் திருப்பூர், மங்லத்தை அடுத்த பூமலூர் பகுதியில் தங்கி அங்குள்ள வாடகை நிலத்தில் மாட்டுப்பண்ணை அமைத்து பசுமாடுகள், காளை மாடுகள் வளர்த்து வந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் சாந்தி வழக்கம் போல தங்களது பண்ணையில் பால் கறக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஒரு காளை மாடு மிரண்டு சாந்தியை பலமாக முட்டி தூக்கி வீசியது . இதில் மாட்டின் கொம்பு குத்தியதில் வயறு உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது . சாந்தி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பண்ணையில் வளர்த்த மாடு மூட்டி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..