கோவை இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள்,மிதிவண்டிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!

கோவை கோட்டையில் உள்ள மனப உல்உலூம் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்க இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில்,M.A.இனாயத்துல்லா வரவேற்க சிறப்பு விருந்தினர்களாக எம்பி கணபதி ப.ராஜ்குமார்,மாநகராட்சி மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன், சட்ட ஆட்சிப்பணி ஆணைய உறுப்பினர், அ. முகமதுஜியாவுதீன் ,துணை மேயர், ரா.வெற்றிச்செல்வன், சிறுபான்மை நலப்பிரிவு கோட்டை அப்பாஸ் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை எடுத்துரைத்தனர் . N.முருகேசன், M.M.அபுதாஹிர், m K.சாகுல்ஹமீது, K.S. சேகர், M.கலீல் ரஹ்மான், T.1.அப்துல் வஹாப், A.கோவை பைசல், அப்துல் ரஹ்மான், முன்னிலையில் சிறுபான்மையினர் நலத்துறை நிதியில், முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்க இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும், 120 நூற்றி இருபது பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் நிர்வாகிகள் பள்ளி தாளாளர்கள் மற்றும் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . முடிவில் நிசார் அஹமத் நன்றி கூறினார்..