மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பரிதாப பலி..

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பொன்னி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 47 ) மின்வாரியத்தில் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காந்தி மாநகர் இ.பி. காலனி அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து மின்வாரிய அதிகாரி சரண்ராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.